சந்திரிக்காவின் ‘லவ்’ குறித்து, மேர்வின் சில்வா சொன்ன கதை

🕔 January 9, 2018

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, வேறு நாட்டவர்களை ‘லவ்’ பண்ணுவதால், அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, நாட்டைக் காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றார் என்று, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தன்னால் போட்டியிட முடியாமல் போனமைக்கு, சந்திரிக்கா குமாரதுங்கவேதான் காரணம் என்றும் அவர் கூறினார்.

தனது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே, மேர்வின் சில்வா இவற்றினைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்;

“ராஜபக்ஷவினர் திருடர்கள் இல்லை. அவர்களிடம் காணப்பட்டவற்றினை விற்பனை செய்துதான் அரசியல் நடத்தினார்கள்.

நாட்டில் இன்று சுதந்திரமாக போக்குவரத்துச் செய்ய முடிகிறது. அதற்கான புண்ணியம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு போய் சேரட்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்