வீதிக் கலைஞர்களுக்கான காட்சிப் பலகைகளை, ஜனாதிபதி கையளித்தார்

🕔 December 21, 2017

வீதி கலைஞர்களுக்காக  கொழும்பு ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திறந்த காட்சிப் பலகைகளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை பிற்பகல் கலைஞர்களிடம் கையளித்தார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு, கொழும்பு நகரசபை மற்றும் ‘அவகாசயே அபி’ வீதிக் கலைஞர்கள் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

ஒவ்வொரு கலைஞருக்காகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ள திறந்த காட்சிப் பலகைகளை பார்வையிட்ட ஜனாதிபதி, அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டார்.

இச்சங்கத்தைச் சேர்ந்த கலைஞர் லக்ஷ்மன் திசாநாயக்க வரைந்த, ஜனாதிபதியின் உருவப்படத்தை, சங்கத்தின் தலைவர் ஏ.சி. நுவன் ஜனாதிபதி மைத்திரியிடம் கையளித்தார்.

வீதிக் கலைஞர்கள் தொடர்பில் எழுதப்பட்ட நூலொன்றினை, இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் ஜெனரல் மல்ராஜ் பீ கிரியெல்ல ஜனாதிபதியிடம் கையளித்தார்.

அமைச்சர் பைஸர் முஸ்தபா, மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கோட்டாபே ஜயரத்ன மற்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் உட்பட, அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்