வீதிக் கலைஞர்களுக்கான காட்சிப் பலகைகளை, ஜனாதிபதி கையளித்தார் 0
வீதி கலைஞர்களுக்காக கொழும்பு ஆனந்தகுமாரசுவாமி மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திறந்த காட்சிப் பலகைகளை, ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று புதன்கிழமை பிற்பகல் கலைஞர்களிடம் கையளித்தார். இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை, மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு, கொழும்பு நகரசபை மற்றும் ‘அவகாசயே அபி’ வீதிக் கலைஞர்கள் சங்கம் ஆகியன இணைந்து இந்த நிகழ்ச்சித் திட்டத்தை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.