மினி சூறாவளியால் 05 வீடுகள் சேதம்; 16 பேர் பாதிப்பு

🕔 October 15, 2017

– க. கிஷாந்தன் –

மி
னி சூறாவளி வீசியமை காரணமாக, மஸ்கெலியா – சாமிமலை பெயார்லோன் தோட்டம் மயில்வத்தை பிரிவில் நேற்று சனிக்கிழமை மாலை 05 வீடுகள் சேதமடைந்தன. அதேவேளை, சிறுவர்கள் உட்பட 16 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இச்சூறாவளியினால் 05 வீடுகளில் உள்ள கூரைகள் அடித்துச் சென்றுள்ளதுடன், வீட்டில் இருந்த பொருட்களும் சேமாகியுள்ளதன.

மின்கம்பங்கள் மற்றும் பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக இப்பிரதேசத்தில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டன.

பாதிக்கப்பட்ட 05 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேருக்கு நிவாரணங்களை வழங்க தோட்ட நிர்வாகம், பிரதேசவாசிகள் மற்றும் கிராம சேவகர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மலையக பகுதிகளில் மழையுடன் கூடிய கடும் காற்று வீசுவதால் மக்களை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் வேண்டியுள்ளனர்.

வழமையான காலநிலைக்கு மாறாக திடீரென கடும் காற்று தொடர்ந்து வீசி வருகின்றது.

இதனால் பாதுகாப்பற்ற மற்றும் உயரமான மரங்களுக்கு கீழ் இருப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறும் பொலிஸார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை பாதுகாப்பற்ற முறையில் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றுமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்