நீர்த் தேக்கத்தில் கார் பாய்ந்து விபத்து; பயணித்த இளைஞன், யுவதி மரணம் 0
– க. கிஷாந்தன் –லிந்துலை பெயார்வெல் பகுதியில், ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்ற கார் விபத்தில், அதில் பயணம் செய்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். குறித்த கார், வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்திலுள்ள – மேல் கொத்மலை நீர்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் பாய்ந்தது.