மஹிந்த மீண்டும் தோற்பார்; ஜனாதிபதி மைத்திரி 0
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் தோல்வியடைவார் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று செவ்வாய்கிழமை ஆற்றிய விசேட உரையிலேயே ஜனாபதிபதி இவ்வாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்; “ஐ.ம.சு. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்க வேண்டும் எனக் கூறினார்கள்.