நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கப்படுவதை எதிர்க்கிறோம்: வாசுதேவ நாணயகார 0
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்படுவதை தாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயகார தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்பட்டால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் கைகளுக்கு தனியானதொரு அதிகாரம் கிடைக்கப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே, இதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.