புர்கா அணிந்து வந்தால், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்க முடியாது: தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு 0
முகத்தினை மூடும் வகையில் புர்கா அணிந்து கொண்டு வருகின்றவர்கள், உள்ளுராட்சி தேர்தல் வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார் என, தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். அதேபோன்று கறுப்புக் கண்ணாடிகள், தலைக்கவசம், தொப்பி அல்லது முகத்தை மூடும் வையில் துணிகளை அணிந்து கொண்டு வருகின்வர்களும், வாக்குச் சாவடிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.