வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக்க உழைப்பேன்: அமைச்சர் றிசாத் உறுதி 0
வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் உறுதியளித்தார். புதிய சாளம்பைக்குளம் ஆயிஷா வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி அதிபர் கே.எம். பைசர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.