தீ விபத்தில் சிக்கி, வர்த்தகர் பலி 0
– க. கிஷாந்தன் – வெலிமடை பொலிஸ் பிரிவில் பெலுங்கல பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்துக் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். வர்த்த நிலையத்தின் உரிமையாளரே தீயில் கருகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெலுங்கல பொரகஸ் பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான கருணாவந்த முதியன்சலாகே பிரேமரத்ன என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.