சிறுபான்மை சமூகங்களின் அரசியல் பயணத்துக்கு வழிகாட்டும் வகையில் எழுதியவர் மாணிக்கவாசகம்: அனுதாபச் செய்தியில் றிசாட் பதியுதீன் 0
“கள நிலவரங்களைக் கட்டியங்கூறும் பொறுப்புள்ள ஊடகவியலாளராக பொன்னையா மாணிக்கவாசகம் பணிபுரிந்தார்” என்று, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் மறைவு குறித்து, அவர் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “தகவல்களைத் திரட்டுவதிலும் அவற்றை செய்தியாக வெளியிடுவதிலும் மாணிக்கவாசகத்திடம் அபார அனுபவம் இருந்தது.