தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல்; 20 பேர் வைத்தியசாலையில், 13 பேருக்கு வகுப்புத் தடை: இரு பீடங்கள் மூடப்பட்டன 0
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர் குழுக்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பல்கலைக்கழகத்தின் இரு பீடங்களை மறு அறிவித்தல் வரை மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட மாணவர்களுக்கும், தொழில்நுட்ப பீட மாணவர்களுக்கும் இடையில் நேற்று புதன்கிழமை இரவு மோதல் சம்பவமொன்று இடம்பெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் சுமார் 300 மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலையடுத்து, பாதிக்கப்பட்ட 20 மாணவர்கள் அக்கரைப்பற்று