இந்தியாவின் பாரபட்ச நடவடிக்கைகளால், இலங்கை முஸ்லிம்கள் அதிருப்தி: தூதுவரிடம் முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துரைப்பு 0
புதிய அரசியலமைப்பில் சிறுபான்மையினரின் அபிலாஷைகள் பேணப்படுவதற்கு இந்தியா அக்கறை காட்ட வேண்டுமென, ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தில், நேற்று செவ்வாய்கிழமை தூதுவர் கோபால் பாக்லேயைச் சந்தித்துக் கலந்துரையாடிய ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், புதிய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்பு மாற்றம் தொடர்பில், இந்தியத் தூதுவருடன் கலந்துரையாடியது. மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலமுள்ள புதிய அரசாங்கம் பிராந்திய, சிறுபான்மை கட்சிகளைக்