சாய்ந்தமருது ஊழியர்கள் மீது பாய்ந்த சட்டம், லதாகரன் விடயத்தில் வாலைச் சுருட்டிக் கொண்டது ஏன்: பொதுமக்கள் கேள்வி 0
– அஹமட் – சாய்ந்தமருதிலுள்ள வர்த்தக நிறுவனமொன்றின் ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் நெருக்கமாக நின்று எடுத்த படங்கள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டமையை அடுத்து, குறித்த நிறுவனத்தை சுகாதாரத் தரப்பினர் மூடி சீல் வைத்துள்ளதோடு, குறிப்பிட்ட ஊழியர்களை தனிமைப்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் அழகய்யா லதாகரனும் அவரின் சக ஊழியர்களும்