எனது பிரச்சினையை பேசுவதற்கு முன்னர், இடை நிறுத்தப்பட்டுள்ள மௌலவிகளை இணையுங்கள்: ஹசனலி 0
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் உள்ளக முரண்பாடுகளைப் பேச்சுவார்த்தைகளின் ஊடாகத் தீர்ப்பதற்கு முன்னதாக, கட்சியிலிருந்து இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் இருவரையும் மீண்டும் கட்சியின் அரசியல் உயர்பீடத்துக்குள் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்சியின் செயலாளர் எம்.ரி. ஹசனலி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையின் பிறகு, தனது பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.