போருக்கான தயார் நிலையில் வடகொரியா; நாளை வரை தென்கொரியாவுக்கு காலக்கெடு 0
வடகொரிய நாட்டுப் படைகளை போருக்கான தயார் நிலையில் இருக்குமாறு, அந்த நாட்டு ஜனாதிபதி கிம் யொங் உண் உத்தரவிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது. வட மற்றும் தென் கொரி நாடுகளுக்கிடையிலான பீரங்கி தாக்குதல்களை அடுத்து இவ்வாறானதொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை, எல்லைகளில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபெருக்கிகளின் ஊடாக, கம்யூனிஸ எதிர்ப்பு பிரச்சாரம் மேற்கொள்வதை, நாளை சனிக்கிழமைக்குள் தென்கொரியா நிறுத்திக் கொள்ள வேண்டுமென, வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.