அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஹமட் லெப்பை காலமானார் 0
– முன்ஸிப் – அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட் லெப்பை சற்று முன்னர் கொழும்பில் காலமானார். அலுவலகக் கடமை நிமித்தம் கொழும்பு சென்றிருந்த அவருக்கு, இன்று புதன்கிழமை காலை திடீர் சுகயீனம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார். கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த