உடைந்தது குட்டு; தாருஸ்ஸலாம் தொடர்பில், உயர்பீட உறுப்பினர்கள் எழுதிய கடிதம் அம்பலம் 0
– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான தாருஸ்ஸலாம் கட்டிடம் மற்றும் அந்தக் கட்சியின் சொத்துக்களின் உரித்து, அவற்றின் வருமானங்கள் தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் தோன்றியுள்ளன. கட்சியின் தலைமையகம், மற்றும் சொத்துக்களை தலைவர் ஹக்கீம், தனதும் தனக்கு விருப்பமானவர்களின் பெயர்களிலும் மாற்றி எழுதிக் கொண்டார் என்கிற குற்றச்சாட்டுக்கள் பரவலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.