கந்தூரி உணவு உண்டதில் மரணமானவர்களின் குடும்பங்களுக்கு, வீடுகள் நிர்மாணிக்க நிதியுதவி; இறக்காமத்தில் நேற்று வழங்கப்பட்டது 0
– முஸ்ஸப் – உணவு நஞ்சானமை காரணமாக இறக்காமம் பிரதேசத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, வீடு நிர்மாணிப்பதற்கான நிதியினை வழங்கும் நிகழ்வு, நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சு இந்த நிதியினை வழங்கியது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இறக்காமம் பிரதேத்தில் சமைக்கப்பட்ட கந்தூரி உணவை உட்கொண்ட பொதுமக்களில் நூற்றுக்