அமீரலி ஒரு தடவை, ஹாபிஸ் நஸீர் ஒரு தடவை; கட்டிடம் ஒன்று, திறப்பு விழா இரண்டு 0
ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்தின் விஞ்ஞான ஆய்வு கூடத்தினை பிரதியமைச்சர் அமீரலி திறந்து வைத்த பின்னர், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் வருகை தந்து, அதே கட்டிடத்தினை திறந்து வைத்த விநோத சம்பவம் நேற்று புதன்கிழமை நிகழ்ந்தது. மட்டக்களப்பு ஓட்டமாவடி பாத்திமா பெண்கள் மகா வித்தியாலயத்தில், விஞ்ஞான கூடமொன்று மத்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டது.