ஏறாவூர் ‘பிரதேச ஒருங்கிணைப்புக் குழு’ இணைத் தலைவராக சுபையிர் நியமனம்

ஏறாவூர் நகர ‘பிரதேச ஒருங்கிணைப்புக் குழு’வின் இணைத்தலைவராக கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய மாகாண சபை உருப்பினருமான எம்.எஸ் சுபையிர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதத்தினை ராஜாங்க அமைச்சர் எம் .எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று திங்கட்கிழமை தனது அமைச்சில் வைத்து கையளித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சுபையிர் – ஏறாவூர் பிரதேச அபிவிருத்தி தொடர்பில் மும்மூரமாக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.