தலைப்புச் செய்திகள்

அம்பிட்டியே சுமனரத்ன தேரருக்கு விளக்கமறியல்: மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு

ட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரரை, நாளை (08) வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மட்டக்களப்பில் உள்ள புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக அலுவலகத்தில், அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாக – தேரர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக, தேரரை இன்று மட்டக்களப்பு பொலிஸார் இன்று கைது செய்து, மட்டக்களப்’பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, அவரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.