ஆஸாத் சாலி ராஜினாமா
மத்திய மாகாண சபை உறுப்பினர் பதவியை ஆஸாத் சாலி ராஜிநாமாச் செய்துள்ளார்.
இந்திய – இலங்கை அமைப்பின் பணிப்பாளராக தன்னை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளமை காரணமாகவே, தன்னுடைய மாகாண சபை உறுப்பினர் பதவியை ராஜிநாமாச் செய்வதாக ஆஸாத் சாலி தெரிவித்துள்ளார்.
மேற்படி நியமனம் தொடர்பில், ஜனாதிபதி தனக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் சாலி கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினூடாக, மத்திய மாகாண சபை உறுப்பினராக ஆஸாத் சாலி தெரிவு செய்யப்பட்டிருந்தார்.