தன்னை கைது செய்தமை சட்ட விரோதமானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி, ஞானசார தேரர் மனு

🕔 February 26, 2016
Gnanasara thero - 01பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உச்ச நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அண்மையில் தன்னை கைது செய்தமையானது சட்டவிரோதமானது என்று தீர்ப்பளிக்கக் கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதித்துறையில் உள்ள பிரச்சினைகளையும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கையில் ஷரியா வங்கிகள் செயற்படுகின்றமை தொடர்பில், மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனுடன் இன்று வெள்ளிக்கிழமை சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாகவும் பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்