நீதவானின் கையொப்பத்தை இட்டு ஆவணம் தயாரித்த நபர் கைது

🕔 July 14, 2024

நீர்கொழும்பு நீதவானின் கையொப்பத்தை இட்டு – ஆவணமொன்றைத் தயாரித்து 3,500,000 ரூபாய் பணத்தைப் பெற்ற நீதிமன்ற முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், இன்று (14) அந்த நபரைக் கைது செய்தனர்.

வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குவதற்காக, சந்தேகநபர் குறித்த ஆவணத்தைத் தயாரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

குறித்த சந்தேகநபர் வெலிசர நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளராகக் கடமையாற்றிய போது, இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதன் காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்