வெள்ளத்தில் இறந்த கோழிகளின் இறைச்சி, சந்தையில் விற்பனை: கவனமாக இருக்குமாறு வேண்டுகோள்
![](https://puthithu.com/wp-content/uploads/2024/06/Chicken-087.jpg)
கோழி இறைச்சியை கொள்வனவு செய்யும் போது இந்த நாட்களில் அதிக கவனம் செலுத்துமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த கோழிகள் – தற்போதை காலகட்டத்தில் சந்தைக்குக் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக, நுகர்வோர் விவகார அதிகார சபைaின் சோதனைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சஞ்சய் ரசிங்க தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கோழி இறைச்சியை உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிப்பதால், அதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சஞ்சய் ரசிங்க மேலும் தெரிவித்தார்.