மண்மேடு சரிந்ததில் இருவர் உயிரிழப்பு

🕔 June 2, 2024

வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில், பல்லேவெல – தெய்யந்தர பகுதியில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெனகம பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 27 வயதுடைய இரு இளைஞர்களே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிதுள்ளனர்.

இதேவேளை, நேற்று (01) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்து எல்லேவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் எல்லேவெல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தெய்யந்தர பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்