மாற்றத்தை ஏற்படுத்தும் நபருக்காக, நாம் காத்திருக்கத் தேவையில்லை: கிழக்கின் கேடயம் தலைவர் சபீஸ்

🕔 May 31, 2024

மாற்றத்தினை ஏற்படுத்த இன்னொருவர் வருவார் என்று காத்திருப்பதை விடவும், நாம் எதிர்பார்க்கும் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துகின்றவர்களாக, நாமே ஏன் இருக்கக் கூடாது என்று, கிழக்கின் கேடயம் தலைவரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான எஸ்.எம். சபீஸ் கேள்வியெழுப்பினார்.

சம்மாந்துறையில் நடைபெற்ற இளைஞர் சந்திப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் இந்த கேள்வியை முன்வைத்தார்.

”மர்ஹூம் எம்.எச்.எம். அஸ்ரப் மரணித்து 24 வருடங்கள் கழிந்துவிட்டது. இந்த காலப்பகுதிக்குள் உலகம் எவ்வளோவோ பரிணாம வளர்ச்சியை கண்டுவிட்டது. ஆனால் நமது மக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேறவில்லை. அதற்கு என்ன காராணம் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும்” எனவும் அவர் கூறினார்.

”எமது மூளை தொடர்ச்சியாக ஒரு விடயத்துக்குப் பழக்கப்பட்டிருகும் போது, மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்றால் – அதற்கு மாற்றுக்கருத்தை தொடர்ச்சியாக மூளைக்கு நாம் வழங்கிக்கொண்டே இருக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

”அதனால் இன்னொருவருர் வந்து மாற்றத்தை ஏற்படுத்தி – எமது மக்களின் வறுமையை போக்குவார்கள் அல்லது நல்ல நிலைமைக்கு நம்மைக் கொண்டுவருவார்கள் என்று எண்ணுகின்றதை விடவும், அதற்கு மாறாக – அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் நபர் ஏன் நாமாக இருக்கக்கூடாது என்ற கருத்தை விதையுங்கள்” எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

”புதிய தொழில் துறைகளை என்னால் உருவாக்க முடியும். என்னால் பலபேருக்கு தொழில் வழங்க முடியும். ஒருமைப்பாட்டை உருவாக்கி ஒன்றாக பயணிக்க முடியும். என்னால் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதனூடாக பிராந்தியத்தையும் நாட்டையும் உயர்த்த முடியும்” என்ற எண்ணத்தை விதைக்கும் முதல் ஆளாக எல்லோரும் மாறவேண்டும்.

அதனூடாக இன்னும் 10 வருடங்களுக்குள் எமது மக்கள் நின்மதியாக வாழ்வதனை நம் கண்முன்னே நாம் காணலாம்” என, அவர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்