மைத்திரிக்கு பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிப்பு

🕔 May 29, 2024

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையுத்தரவு, ஜூன் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தாக்கல் செய்த மனு, இன்று (29) கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த தடை நீடிப்பு உத்தரவு வழங்கப்பட்டது.

இந்த தடை உத்தரவு ஜூன் 12ம் தேதி வரை அமுலில் இருக்கும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாப்பின் பிரகாரம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு சட்டரீதியான உரிமை கிடையாது என, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்