கார் பந்தயத்தில் விபத்து; 07 பேர் பலி, 04 பேர் கவலைக்கிடம்: தியத்தலாவையில் துயரம்
கார் பந்தயமொன்று நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் ஏற்பட்ட விபத்தில் 07 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தியத்தலாவையில் இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ எனும் கார் பந்தயத்திலேயே இந்த துயரம் ஏற்பட்டுள்ளது.
பந்தயத்தில் ஓடிய கார், பாதையை விட்டு விலகி – ஆட்களை மோதியதில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
உயிரிழந்தவர்களில் 08 வயதுடைய சிறுமி ஒருவரும் உள்ளடங்குவதாக இலங்கை இராணுவப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இதேவேளை, விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 24 பேரில் 04 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து ‘Fox Hill Super Cross 2024’ பந்தய நிகழ்வு தற்போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.