தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ராஜிநாமா

🕔 April 22, 2024

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே – அவரின் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி செயலகத்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் மே மாதம் 02ஆம் திகதி அவரின் பதவியிலிருந்து விலகுவதாக வில்லி கமகே, அவரின் ராஜிநாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது வடமேல் மாகாண ஆளுநராக பதவி வகிக்கும் லக்ஷ்மன் யாப்பா அபேகுணவர்த்தன, தென் மாகாணத்துக்கு நியமிக்கப்படவுள்ளார் என, ஏற்கனவே செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், வில்லி கமகே ராஜிநாமா செய்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்