நீதிமன்றில் ஆஜராகுமாறு மைத்திரிக்கு உத்தரவு

🕔 March 28, 2024

ஸ்டர் தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் அண்மையில் கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டமா அதிபரின் பணிப்புரையின் பேரில் – குற்றப்புலனாய்வு திணைக்களம் (சிஐடி) இது தொடர்பான விடயங்களை நீதிமன்றில் அறிக்கையிட்டதை அடுத்து, இன்று (28) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் – குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் கடந்த திங்கட்கிழமை சுமார் 06 மணித்தியாலங்கள் மைத்திரி வாக்குமூலம் வழங்கினார்.

தொடர்பான செய்தி: ஈஸ்டர் தினத் தாக்குதலின் சூத்திரதாரி இந்தியா: சிஐடி யிடம் மைத்திரி பரப்பு வாக்குமூலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்