ஐந்தரை மணி நேர வாக்குமூலம்: சிஐடி-இல் இருந்து வெளியேறினார் மைத்திரி

🕔 March 25, 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (சிஐடி) சுமார் ஐந்தரை மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

ஈஸ்டர் தின தாக்குதலின் சூத்திரதாரி யார் என தனக்குத் தெரியும் என்று அண்மையில் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை தொடர்பாக, வாக்குமூலம் வழங்க வருமாறு அவரை குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைத்திருந்தது.

அதற்கிணங்க இன்று (25) காலை அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் மைத்திரி தெரிவித்த விடயம் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்