ஜனாதிபதி ரணிலுக்கு இன்று 75 வயது

🕔 March 24, 2024

னாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும்.

கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்று- கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். இலங்கையில் பல்கலைக்கழகம் ஒன்றில் கல்வி பயின்ற முதல் ஜனாதிபதியாக அவர் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

1977 ஆம் ஆண்டு பியகம தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றம் பிரவேசித்த ஜனாதிபதி, அதன் பின்னர் தொடர்ந்து 47 வருடங்களாக பாராளுமன்றத்தை நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

நாட்டில் 06 முறை பிரதமர் பதவியை வகித்து சாதனை படைத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தலின்றி நாடாளுமன்றம் மூலம் ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளமை அரசியல் ஆச்சரியமாகும்.

அரகலய எனும் மக்கள் போராட்டத்தின் காரணமாக அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியிலிருந்து விரட்டப்பட்ட போது, ஜனாதிபதி பதவியைப் பொறுப்பெடுத்துக் கொண்டார்.

இலங்கையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியொருவர் இடையில் பதவி விலகியமை காரணமாக, நாடாளுமன்றம் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதல் ஜனாதிபதி எனும் பெருமையும் ரணில் விக்ரமசிங்கவுக்கு உரித்தானது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்