உச்ச நீதிமன்றை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட சட்டத்தரணிக்கு விளக்க மறியல்

🕔 March 20, 2024

ச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட சட்டத்தரணியொருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உச்ச நீதிமன்றம் இன்று (20) உத்தரவிட்டுள்ளது.

மேலும், குறித்த சட்டத்தரணியை ஏப்ரல் 03ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறை அதிகாரிகளுக்கு உச்சநீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

அதேவேளை, இந்த வழக்கின் விசாரணை முடியும் வரை குறித்த சட்டத்தரணியை – வழக்கு நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நீதிமன்றம் இடைநிறுத்தியுள்ளது.

சட்டத்தரணி சுசில் பிரியந்த ஜயதுங்க, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்து – உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் நடந்துகொள்ளும் வகையில் – மீண்டும் மீண்டும் தனது சமர்ப்பணங்களை முன்வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பில் சட்டத்தரணிக்கு எதிராக குற்றப்பத்திரமொன்றை அடுத்த விசாரணைத் திகதியில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதியரசர்கள் பிரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் – சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அவரது ஆரோக்கியம் குறித்து அறிக்கை பெறுவதற்காக, மனநல மருத்துவரிடம் சட்டத்தரணியை ஆஜர்படுத்துமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்