“மக்களுக்கு துரோகம் செய்தார்”: மஹிந்த முன்பாக கோட்டாவை குற்றஞ்சாட்டி பேசிய முருத்தெட்டுவே தேரர்

🕔 March 16, 2024

க்களுக்கு துரோகம் இழைத்தமையினால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வீழ்ச்சியை எதிர்கொண்டதாக, மேல்மாகாண பிரதம சங்கநாயக்கரும் அபயராம பீடாதிபதியுமான கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்ட நிகழ்வொன்றில் உரையாற்றும் போது அவர் – முன்னாள் ஜனாதிபதி கோட்டாவை இவ்வாறு கடுமையாக குற்றஞ்சாட்டியமை குறிப்பிடத்தக்கது.

பெரும்பான்மை வாக்குகளுடன் தெரிவு செய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்ஷ – மக்களுக்கு துரோகம் இழைத்து வீழ்ச்சியை எதிர்கொண்டதாக முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் குறிப்பிட்டார்.

முன்னாள் ஜனாதிபதிக்கு நிருவாகத் திறமையோ, ஆளுமைத் திறமையோ இல்லையென்றும், தனக்கு நன்மை பயக்கும் ஆட்களையே அவர் சூழவும் வைத்துக் கொண்டார் என்றும் கலாநிதி முருத்தெட்டுவே ஆனந்த நாயக்க தேரர் குற்றஞ்சாட்டினார்.

“அவர் தவறான பாதையில் பயணிப்பதாக நாங்கள் பலமுறை அவருக்குத் தெரிவித்தோம். இதனால் அவர் வீழ்ச்சியை சந்தித்தார். அவருக்கு ஆட்சி செய்யும் திறமை இல்லாததே – இன்று நாம் இந்த நிலைக்கு முகம் கொடுக்கக் காரணம்” என தேரர் மேலும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்