கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

🕔 March 15, 2024

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 2021/2022 கல்வியாண்டில் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் – மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ள கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி இன்று (15) வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை நிகழ்நிலை (online) மூலம் அனுப்ப வேண்டும் என்றும், நிகழ்நிலை (online) மூலமே தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்நிலை (online) மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசித் திகதி ஏப்ரல் மாதம் 05ஆம் திகதியாகும்.

இன்று (15) மதியம் 12 மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்