இந்திய உயர்ஸ்தானிகர் – பசில் சந்திப்பு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா நேற்று (13) பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷவை சந்தித்தார்.
இருதரப்பு உறவுகள், அரசியல் முன்னேற்றங்கள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள பிற விஷயங்களில் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர் என தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் ஊடகங்களிடம் பேசிய பசில் ராஜபக்ஷ – எதிர்வரும் தேர்தலுக்கு பொதுஜன பெரமுன தயாராகி வருவதாகக் கூறியிருந்தார்.
இந்தியத் தூதருடனான சந்திப்புக்கு முன்னர், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும் பசில் சந்தித்துப் பேசியதாகவும், இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.