சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணைக்கு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு

🕔 March 14, 2024

பாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தாம் ஆதரவு வழங்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு நட்டாங்கண்டல் அரசினர் தமிழ்கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசிய – தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இதனைக் கூறினார்.

“சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்று எதிர்கட்சியினால் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த பிரேரணையில் கையொப்பம் இடுவதற்கான கோரிக்கை எமக்கு இதுவரை விடுக்கப்பட்வில்லை” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும், அந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக நிச்சயமாக வாக்களிக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன அரசினுடைய அல்லது நாடாளுமன்றத்தினுடைய அல்லது மக்களின் காவலனாக அவர் தன்னுடைய கடமையை ஆற்றுவதற்கு தவறுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்