அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு: மோதிய வாகனம் தப்பிச் சென்றது

🕔 March 9, 2024

னுராதபுரம் – ரம்பேவ பிரதேசத்தில் இன்று (09) அதிகாலை நடந்த விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகமாக வந்த கெப் வண்டியொன்று மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் இசை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ரம்பேவயில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த கெப் வண்டியில் மோதி விபத்துக்குள்ளானதாக அவர்கள் கூறியுள்ளனர்.

விபத்தின் பின்னர் கெப் சாரதி தப்பிச் சென்றுள்ளதுடன், காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழரந்தவர்கள் 16 மற்றும் 21 வயதுடைய மூன்று ஆண் இளைஞர்களாவர். படுகாயமடைந்த நிலையில், இரண்டு பெண்கள் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மிஹிந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்