ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட, இலங்கையர் 06 பேர் கனடாவில் படுகொலை: சந்தேக நபர் ‘தற்கொலைக்கு முயற்சித்தவர்’ என தகவல்

🕔 March 8, 2024

லங்கை இளைஞர் ஒருவர் கனடாவில் நடத்திய தாக்குதலில் இலங்கையர்கள் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 05 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர்.

பலியான 06 பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு குழந்தைகள் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர்.

குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயதுடைய டி. சொய்ஸா என்பவரே – இந்தக் கொலைகளை செய்துள்ளார்.

ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் வீட்டில் சில காலம் சந்தேக நபர் வசித்து வந்ததாகவும், அவரின் 19ஆவ பிறந்த நாளை சில தினங்களுக்கு முன்னர் அங்கு கொண்டாயதாகவும் தெரியவருகிறது.

இந்த நிலையில் சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்து தாயும் அவரரின் நான்கு பிள்ளைகளும். அந்த குடும்பத்துடன் வசித்து வந்த ஒருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

மேலும் சந்தேக நபர் குற்றப் பதிவுகள் எவையும் இல்லாதவர் என்றும், கல்வியை தொடர்வதற்காக கனடா வந்தவர் எனவும் கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் 35 வயதுடைய தர்ஷனி டிலந்திகா ஏக்கநாயக்க என்ற பெண்ணும் அவரின் 07 வயதுடைய மகனும், நான்கு வயதுடைய மகளும், இரண்டு வயதுடைய மகளும், இரண்டு மாத குழந்தையும் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஆறாவது நபர் 40 வயதுடைய காமினி அமரகோன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்த பிள்ளைகளின் தந்தை சம்பவத்தில் காயமடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கூரிய ஆயுதமொன்றை பயன்படுத்தி கொலைகளை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபருக்கும் பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் இடையில், எந்தப் பிரச்சினைகளும் இல்லை என்று, அந்தக் குடும்பத்தினர் சென்று வரும் பௌத்த கோயிலின் பிக்கு ஒருவர் – சந்தேக நரின் நண்பர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

சந்தேக நபரின் பெற்றோரை பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இலஙகையில் இருந்த போது சந்தித்துள்ளதாகவும் தெரியவருகிறது.

சந்தேக நபர் டி சொய்சா – அவரின் கல்லூரியில் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் அண்மையில் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டதாகவும் அவரின் நண்பர் தெரிவித்ததாக மேற்படி பிக்கு மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிப்பதாகவும், இது பயங்கரமான வன்முறை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்