03 கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப் பொருளுடன் இருவர் கைது

🕔 March 7, 2024

‘ஐஸ்’ எனப்படும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் மூன்று கிலோகிராமுடன் – இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் 27 மற்றும் 31 வயதுடைய சேதவத்தை மற்றும் மட்டக்குளிய பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் 3.336 கிலோகிராம் எடையுள்ள ‘ஐஸ்’ பாதைப்பொருளுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளை – ஹெந்தலை பிரதேசத்திலுள்ள எலகந்த பகுதியில் வைத்து – சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸார், கடத்தல் பொதைப் பொருட்களையும் கைப்பற்றினர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்