465 பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்கப்படாமை குறித்து ஆராயுமாறு சஜித் கோரிக்கை

🕔 March 7, 2024

சுமார் 465 பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படாமை தொடர்பில் ஆராயுமாறு – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அண்மையில் 60,000 பட்டதாரிகளுக்கு அரசாங்கத்திடமிருந்து நியமனம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இருந்தபோதிலும், சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் தவறுகளால் 465 பட்டதாரிகளுக்கு நியமனம் கிடைக்காமல் போனதாக அவர் கூறினார்.

இந்த விடயம் முன்னரும்பாராளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டதாக கூறிய எதிர்க்கட்சித் தலைவர், எனினும் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார்.

எனவே இது குறித்து விரைவில் தீர்வு காணுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்