நாடாளுமன்ற உறுப்பினராக 71 வயதில் முத்துக்குமாரன பதவிப் பிரமாணம்

🕔 March 5, 2024

புதிய பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன இன்று (05) சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ராஜினாமாவால் வெற்றிடமாகியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன, நாடாளுமன்ற நியமனத்திற்கு தகுதி பெற்றிருந்தார்.

71 வயதுடைய முத்துக்குமாரன – முன்னரும் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: 71 வயதில் மீண்டும் எம்.பி ஆகிறார் முத்துக்குமாரன

Comments

புதிது பேஸ்புக் பக்கம்