பாடசாலைகளில் வெளிப்புற நிகழ்வுகளைத் தவிர்க்கவும்: கல்வியமைச்சு உத்தரவு

🕔 February 28, 2024

நாட்டில் தற்போது நிலவும் அதிக வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வெள்ளிக்கிழமை (மார்ச் 01) வரை பாடசாலைகளில் கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அனைத்து பாடசாலைகளின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, திட்டமிடப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகள், பயிற்சிகள் மற்றும் பிற வெளிப்புற நடவடிக்கைகள் தற்போதைக்கு இடைநிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் பாடசாலை அதிபர்களுக்கு விளக்கமளிக்குமாறு மாகாண மற்றும் வலயக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பாக சுகாதார அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு வழங்கிய வழிகாட்டுதல்களுக்கு பாடசாலை நிர்வாகங்கள் இணங்கி நடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்