காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை

🕔 February 9, 2024

பாறுக் ஷிஹான்

காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் – இன அழிப்பை கண்டித்து, பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக – கல்முனை பிரதேசத்தில் இன்று (09) கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது.

கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில்  இருந்து ஆரம்பித்து கல்முனை ஐக்கிய சதுக்கம் வரையில் – கவன ஈர்ப்பில் ஈடுபட்டோர் பதாதைகளை ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்றனர்.

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த ஆரம்பித்து பல மாதங்கள் கலந்து விட்ட நிலையில், யுத்தத்தினால் இதுவரையில் பல ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக, இதன்போது கவன ஈர்ப்பில் ஈடுபட்டோர் குரலெழுப்பினர்.

இந்த கவன ஈர்ப்பு நடவடிக்கையின் போது பலஸ்தீன் மக்களுக்காக பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்