மாதாந்தக் கொடுப்பனவுகள் அதிகரிப்பு

🕔 February 8, 2024

மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் வயோதிபர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த கொடுப்பனவுகள் 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் கொடுப்பனவுகள் பின்வருமாறு அமையும்

  • சிறுநீரக நோயாளிகள் – ரூ. 7,500 (முன்பு ரூ. 5,000)
  • மாற்றுத்திறனாளிகள் – ரூ. 7,500 (முன்பு ரூ. 5,000)
  • முதியோர் – ரூ. 3,000 (முன்பு ரூ. 2,000)

இதேவேளை, தற்போது நிவாரணப் பயனாளி குடும்பங்களில் உள்ள ஊனமுற்றோர், முதியோர் மற்றும் சிறுநீரக பாதிப்புக்கான கொடுப்பனவுகளைப் பெறத் தகுதியுடையவர்கள் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் அடையாளம் காணப்பட்டு, அதன் பின்னர் ஏப்ரல் 01ஆம் திகதி முதல் அவர்களுக்கும் இந்த அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்