விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய வைத்தியசாலையில் அனுமதி

🕔 February 3, 2024

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரை 15ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு இன்று (03) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆயினும் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த அவர் – வைத்தியப் பரிந்துரையின் பேரில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரம்புக்வெல்லவின் நோயின் தன்மையை திணைக்களம் வெளியிடவில்லை.

தற்போதைய சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசியை இறக்குமதி செய்ததில் ஊழல் செய்ததாக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றுநேற்று கைது செய்யப்பட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்