நாடாளுமன்ற பெண் ஊழியர்களிடம் தவறாக நடந்து கொண்ட மூன்று சிற்றூழிர்களில் ஒருவருக்கு பிணை

🕔 January 31, 2024

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் இருவரிடம் தவறாக நடந்து கொண்டார்கள் எனும் குற்றச்சாட்டில் நேற்று (30) கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற சிற்றூழியர்கள் மூவரில் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், நாடாளுமன்றத்தில் பணியாற்றிய சிற்றூழியர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று (30) கடுவெல நீதவான் நீதிமன்றில் மூவரும் ஆஜர்செய்யப்பட்ட போது, தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில், அவர்களில் ஒருவரை விடுவிக்குமாறு கடுவெல நீதவான் உத்தரவிட்டார்.

2022 ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடைபெற்றதாகவும், சம்பவம் இடம்பெற்று ஒரு வருடத்துக்குப் பின்னர் – இது தொடர்பில் பொலிஸாரிடம் முறையிடப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு நீதவான் உத்தரவிட்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்