ஈஸ்டர் தின தாக்குதல்களில் இறந்தவர்கள் தொர்பாக, விடுக்கவுள்ள முக்கிய அறிவிப்பு: பேராயர் மெல்கம் ரஞ்சித் தகவல்

🕔 January 21, 2024

ஸ்டர் ஞாயிறு தாக்குதலில் இறந்தவர்களை புனிதர்களாக அறிவிக்க உள்ளதாக கத்தோலிக்க திருச்சபை கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார.

கந்தானை புனித செபஸ்டியன் தேவாலயத்தில் நடைபெற்ற ஆராதனையின் போது உரையாற்றிய பேராயர்; இவ்வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தின குண்டுத் தாக்குதல்களின் ஐந்தாவது ஆண்டு நினைவு தினத்தை நாடு அனுஷ்டிக்கும் போது இதற்கான முதல் படி எடுக்கப்படும் என்றார்.

“ஏப்ரல் 21, 2019 அன்று தேவாலயங்களில் இறந்தவர்கள் தங்களின் நம்பிக்கைக்காக, அவர்களுடைய வாழ்க்கையை தியாகம் செய்தனர். அன்று அவர்கள் கிறிஸ்துவை நம்பியதால் தேவாலயத்துக்கு வந்தனர். மற்ற புனிதர்களைப் போல கிறிஸ்துவை நேசித்ததால் அவர்கள் தங்கள் வாழ்க்கையை தியாகம் செய்தனர்” என்று அவர் கூறினார்.

“ஒருவர் தியாகம் செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரே அவரை புனிதர் என்று பெயரிட முடியும். எனவே, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை இந்த ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி புனிதர்களாக அறிவிப்பதை நோக்கி நகர்வோம்” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

“கிறிஸ்தவம் என்பது தேவாலயங்களில் மத வழிபாடுகளில் ஈடுபடுவது மட்டுமல்ல. நாம் நீதிக்காக நிற்க வேண்டும். மற்றவர்களின் நீதிக்காக நாம் பேச வேண்டும். இதைத்தான் திருத்தந்தை பிரான்சிஸ் – திருச்சபை எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தனது திருமறையில் நமக்குக் கற்பித்துள்ளார்” என்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்